Monday, March 9, 2015

காதல் என்பது!......

இன்று போனில்...
அம்மா : சொல்லு கேசு
நான் : இங்க ஒன்னுமில்ல மா நீ தான் சொல்லனும்!
அம்மா : ஏன் வாயிஸ் ஒரு மாதிரி இருக்கு? (பேசின ஒற்றை வரியிலேயே கண்டுபிடித்துவிட்டாள் கள்ளி tongue emoticon )
நான் : ஒன்னுமில்ல சளி இருமல் ஜுரம் வர்றா மாதிரி இருக்கு!
அம்மா : உடம்ப பாத்துக்கோ டா
மாத்திரை சாப்டியா டாக்டர் கிட்ட போயிட்டுவா...
நான் : ஐ லவ் யூ ம்மா heart emoticon
அம்மா : இதென்ன டா புது பழக்கம் என்ன இன்னிக்கு காதலர் தினமா? மதர்ஸ் டேக்கு சொன்னா கூட பரவால...
நான் : ஆள் இருக்குறவன் லவ்வருக்கு சொல்றான். நான் உனக்கு சொல்றேன். ஏன் காதல் அன்பு எல்லாம் காதலிகிட்ட மட்டும் தான் இருக்கனுமா என்ன?! வளர்த்தவ கிட்ட இருக்க கூடாதா என்ன?
அம்மா : நீ பேச ஆரம்பிச்சா சீக்கிரம் கண்வீன்ஸ் பண்ணிடுவ டா என்றாள் வெட்கத்தோடு....
அம்மா வெட்க்கப் படும் அழகே தனி அழகு தான்! என்ன கொஞ்சம் கோபக்காரி...இருந்தால் என்ன கோபமிருக்கும் இடத்தில் தானே குணமிருக்கும்! அப்பா விட்டுச் சென்ற அன்றிலிருந்து தனி மனுசியாய் ஆளாக்கப் பாடாய் படுபவள் அவள் தானே!
அப்பா விட்டுச் சென்ற நிலபுலங்களையும் அதனோடு சேர்ந்த வழக்கு விவகாரங்களையும் தனியொரு பெண்ணாக இருந்து கோர்ட், காவல்நிலையம் என அனைத்தையும் தனியாக எதிர் கொண்டவள்!
நானும் கூட சில நேரம் நினைப்பதுண்டு வீட்டில் உறவினர் வந்தால் சமையற் கட்டின் கதவருகில் நின்று உள்ளேயிருந்தே பதில் அளிப்பாள் அப்பாவிடம். அப்பா / அம்மா சண்டைகளில் கோபம் வந்து கத்தினாலும் மற்ற நேரங்களில் அமைதி தான் யாரையும் எளிதாக நம்பிவிடும் சுபாவம் அவளுடையது...அந்த பெண்ணா இவள் என்று பிரம்மித்ததுண்டு!
பெற்ற பிள்ளை வளர்த்த பிள்ளை என எந்த பாகுபாடும் கிடையாது அவளிடம்! என்ன கொஞ்சம் புலம்பல் ஜாஸ்த்தி அனைவரிடம் புலம்வது என இருப்பாள்! சொல்லிப்பார்த்தேன் கேட்கவில்லஐ பாவம் அவளின் மனக்கழிவுகளை எங்கே சென்று இறக்குவாள்? எத்தனை நேரம் தான் அவள் வளர்க்கும் பறவைகிளிடமும்/மீனிடமும்/ நாயிடமும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பாள்?
இன்றும் நினைவில் இருக்கிறது அம்மா நீ என்னை டிப்ளமோவில் சேர்த்து விடும் போது கல்லூரி வளாகத்தில் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணில் நீருடன் சொன்னாய் : "கேசு நல்லா படிச்சிடு டா உங்கப்பா இருந்திருந்தா இதகு கூட பண்ணியிருப்பாரா தெரியாது!" வைத்திருக்கிறேன் அம்மா மனதில் அந்த சொற்க்களைப் பச்சைக் குத்தி!
நீ எனக்கு செய்ய நினைத்ததை செய்துவிட்டாய் செய்து கொண்டும் இருக்கிறாய். ஆனால், உனக்கு நான் செய்யவேண்டிய உபகாரம் இன்னும் நிறைய இருக்குது ம்மா! smile emoticon
ஐ லவ் யூ மை கிழவி! <3

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : மகளிர் மட்டும்

    ReplyDelete