நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி ஒரு வர் அழைத்திருந்தார். அயர்ச்சியான குரலாய் இருக்க "என்ன மச்சி ஆச்சு?" எனக் கேட்டேன். அவர் காதலித்துக்கு கொண்டிருந்தார் அவருடைய இணை கூறிய விசயத்தை எல்லாம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார்...
உதாரணமாக ஆண் நண்பர்களுடன் பேசாதே, வெளியே என்னுடைய அனுமதியுடன் தான் போக வேண்டும்...நான் கூறுகின்ற வேலைக்குத் தான் நீ போக வேண்டும்... உனக்கு இது தெரியாது அது தெரியாது நான் சொல்லுவதைத் தான் செய்ய வேண்டும். இறுதியாக இனிமேல் நீ எதையும் எழுதக் கூடாது படிக்கக் கூடாது என முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார் தோழியின் காதலர்...
இதில் நீ இனிமே படிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கூறுவதெல்லாம் தீவர தாழ்வு மனப்பான்மையின் உச்சம்! "நான் படிக்குறதில்ல, அதனால நீயும் படிக்கக் கூடாது. ஏன்னா என்னைய விட ஒரு விசயத்த நீ அதிகமா தெரிஞ்சுக்கிட்டா என்னோட பேச்ச நீ கேக்க மாட்டல்ல" என்னும் மனப்பான்மையின் வெளிப்பாடு! இந்த மாதிரியான மனப்பான்மை ஒருசில எழுத்தாளர்களுக்கே இருக்கிறது.
இத்தனையும் சொன்னது ஒரு படிக்காத கிரமாத்து ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. அவரும் படித்த ஆசாமி தான், ஒரு நிறுவனத்தின் மனிதவளத் துறையில் பணி புரியும் நபர்...ஆக நாம் படித்த படிப்பு இப்படி எல்லாம் தான் நம்மை பிற்போக்காக சிந்திக்க வைத்துள்ளதா அல்லது நம்மிடம் உள்ள பிற்போக்கான எண்ணங்களையும், செயல்களையும் போற்றிப் பாதுகாப்பதற்கான சூழலைத் தான் ஏற்படுத்திக் கொடுக்கிறதா என்னும் பெரிய கேள்விக் குறி எழாமல் இல்லை...
ஆண் பெண் உறவுவில் 100/75 இப்படியான கட்டுப்பாட்டுடன் தான் தினமும் நகர்த்தப்படுகிறுது! அதாவுது தன்னை காதலிக்கும் / திருமணம் முடித்த பெண்ணிற்கு ஒரு அழகான பொற் கூண்டினைத் தான் இன்றைய ஆண்கள் பெரும்பாலும் கொடுக்க நினைக்கிறார்கள்! இந்த மாதிரியான நிலையை மாற்றுவதற்கு பெண்ணும் நம்மைப் போன்ற ஒரு சமமான உயிர் தான் இவளுக்கும் நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் இருக்கின்றன என்பதை ஆண்கள் தெளிவுற வேண்டும்...
நீங்கள் இந்த மாதிரியான அடக்குமுறைகளை ஒரு பெண்ணின் மீது கையாளும் போதெல்லாம் ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள்.
பெண்ணோடு திறந்த மனதுடன் அமர்ந்து அவளுடைய கனவுகளையும், இலட்சியங்களையும் கொஞ்சமேனும் கேளுங்கள்...
அவர்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள உதவ முடியாவிட்டாலும் தடையாக இருக்காதீர்கள்! ஏனென்றால் பெண் என்பவள் ஒரு ஜடப்பொருள் அல்ல நீங்கள் உங்களுடைய உடைமையாக நினைத்து அடக்கி ஆட்சி செயவதற்கு! அவளும் ரத்தமும், சதையும், நரம்பும் நிறைந்த நம்மைப் போலவே 6 அறிவும் நிறைந்த ஒரு உணர்வுள்ள ஜீவன் தான் என்பதை மனதில் நிறுத்தினாலே போதும் உறவுப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வரலாம்...
இதே மாதிரியான கண்ணோட்டத்தை ஒரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டும்...அப்போது தான் அந்த இணை ஆண்-பெண் சமத்துவ சமூதாயத்தின் அங்கத்தினர் என்கின்ற நிலையை எய்த முடியும்!
- கேசவராஜ் ரங்கநாதன்
24-09-2017
No comments:
Post a Comment