புத்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுமே மனசுக்குள் ஒரு கேள்வி 1945 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் எப்படி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஓத்துப் போகின்றது? என்பதாகத் தான் இருக்கிறது.
புத்தகம் கம்யூனிச அதிகார வர்க்கத்தினுடைய அநியாயங்களையும், சுரண்டல்களையும் கருப் பொருளாகவும், விலங்குகளைக் குறியீடாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை இந்தப் புத்தகம் தீர்க்கமான பார்வையினை வெளியிட்டிருப்பதை நீங்கள் காணலாம். இதே பார்வை அனேகமான அரசியல் காலகட்டங்களோடு பொறுந்தியும் இருந்திருக்கிறது.
படிப்பதற்கு கடினமில்லாத சொற்களின் கலவையோடு மொழிபெயர்த்திருக்கிறார் பி.வி.ராமஸ்வாமி. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம் விலங்குப் பண்ணை!
விலங்குப் பண்ணை (141 பக்கங்கள்)
- ஜார்ஜ் ஆர்வெல் (தமிழில் : பி.வி.ராமஸ்வாமி)
கிழக்கு பதிப்பகம் - விலை : ரூ.85
No comments:
Post a Comment