கடந்த வருடத்தைவிட இந்த வருடம் என்னளவில் வாசிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்...அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என் குற்றவுணர்வைத் தூண்டி வாசிக்க வைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!
படித்த புத்தக்கங்கள் கொஞ்சமேனும் மனிதர்களைப் பற்றிய புரிதலையும், உலகத்தைப் பற்றிய புரிதலையும் அளித்திருக்கிறது என்கிற திருப்தி என்னை வாசிப்பை நோக்கியும் மனிதர்களை நோக்கியும் இழுத்துச் செல்கிறது...
இவை நான் வாசித்த புத்தகங்கள் மட்டுமே. இந்த பட்டியல் தர வரிசை கிடையாது...
இந்த வருடம் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் கீழே :
1. விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்
2. கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே
3. தஞ்சைப் பிரகாஷ் சிறுகதைகள் - அகநாழிகை பொன்.வாசுதேவன்
4. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
5. மாதொருபாகன் - பெருமாள் முருகன்
6. ஆலவாயன் - பெருமாள் முருகன்
7. ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்
8. சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்
9. இரவிற்கு முன்பு வருவது மாலை - ஆதவன்
10. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்
11. சாதியை ஒழிக்க வழி - டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர்
12. கிருஷணப் பருந்து - ஆ.மாதவன்
13. ஒரு சிறு இசை - வண்ணதாசன்
14. மரப்பசு - தி.ஜானகிராமன்
15. நாளை மற்றொரு நாளே - ஜி.நாகராஜன்
16. பொன்னியின் செல்வன் (பாகம் 1&2)
17. கருக்கு - பாமா
18. மிளர்கல் - இரா.முருகவேள்
19. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
20. பூக்குழி - பெருமாள் முருகன்
21. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
22. சாயாவனம் - சா.கந்தசாமி
23. வலை (குறுநாவல்) - ஜான் பிரபு
24. அஜ்வா - சரவணன் சந்திரன்
25. வெட்டாட்டம் - ஷான்
26. முகிலினி - இரா.முருகவேள்
புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்த நண்பர்களுக்கும், தங்கள் வாழ்வின் அனுபவங்களையும் தங்களின் எழுத்தின் வழியாக வந்து என்னிடம் உரையாடும் எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏🙏
புத்தாண்டையும், ஜனவரி புத்தக திருவிழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்! 😍😍😀😀
- கேசவராஜ் ரங்கநாதன்
29/12/2017