#வாசிப்பு2020
1/2020
தறியுடன் - இரா.பாரதிநாதன்
தலைப்பை பார்த்தவுன் வாங்க வேண்டும் என மனதில் நினைத்த புத்தகம்! காரணம் கைத் தறியின் சத்தத்தையும், பவர் லூம்ஸின் சத்தத்தையும் கேட்டு வளர்ந்தவன் என்பதால்...பட்டு, நூல், பேட்டு, கண்டிகை என நெசவுத் தொழிலை மையமாக கொண்டு பல நூறு குடும்பங்களில் ஒன்று எங்களின் குடும்பமும்...அப்பாவினால் நெசவைத் தொடர முடியாவிடாலும் சொந்தங்கள் பெரும்பாலும் தறியை நம்பித் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தான் தறியுடன் நாவலின் நிகழ்விடம்...கதையின் நாயகன் ரங்கன். அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் நாவல்...சேலத்தின் வட்டார வழக்கு, நெசவு செய்யும் மக்களின் வாழ்க்கை முறை என ஆரம்பத்தில்லிருந்தே கதை வாசிப்பவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது! சிரமம்மில்லாத எழுத்து நடை, வர்ணனை என எல்லாவற்றிலும் ஒரு சிறு பிசுறு இல்லாமல் கதையில் நன்றாக ஒன்றி வாசிக்க முடிகிறது...
தறியோட்டும் நெவுத் தொழிலாளர்கள் தினமும் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்களையும் அவற்றை எல்லாம் எதிர்த்து போராடும் நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தைப் பற்றியும் அழகாக கொடுத்திருக்கிறார்...ரங்கன் எவ்வாறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் முழுநேர சேவகனாக வருகிறான்...இயக்கத்தில் இருக்கும் தலைமறைவுத் தோழர்கள் படும் இன்னல்கள்...அரசும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கச் செய்யும் சதித்திட்டங்கள் என நாவல் தொய்வில்லாமல் எழுதியிருக்கிறார்...
மக்களுக்காக போராடும் போராளிகளை அரசும், அதன் இயந்திரமும் தீவிரவாத முத்திரை குத்தி அழிக்க நினைக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டியுள்ளது தறியுடன்!
புத்தகம் : தறியுடன்
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்
பதிப்பகம் : பொன்னுலகம் புத்தக நிலையம்
பக்கங்கள் : 780
விலை : 650/-
1/2020
தறியுடன் - இரா.பாரதிநாதன்
தலைப்பை பார்த்தவுன் வாங்க வேண்டும் என மனதில் நினைத்த புத்தகம்! காரணம் கைத் தறியின் சத்தத்தையும், பவர் லூம்ஸின் சத்தத்தையும் கேட்டு வளர்ந்தவன் என்பதால்...பட்டு, நூல், பேட்டு, கண்டிகை என நெசவுத் தொழிலை மையமாக கொண்டு பல நூறு குடும்பங்களில் ஒன்று எங்களின் குடும்பமும்...அப்பாவினால் நெசவைத் தொடர முடியாவிடாலும் சொந்தங்கள் பெரும்பாலும் தறியை நம்பித் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தான் தறியுடன் நாவலின் நிகழ்விடம்...கதையின் நாயகன் ரங்கன். அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் நாவல்...சேலத்தின் வட்டார வழக்கு, நெசவு செய்யும் மக்களின் வாழ்க்கை முறை என ஆரம்பத்தில்லிருந்தே கதை வாசிப்பவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது! சிரமம்மில்லாத எழுத்து நடை, வர்ணனை என எல்லாவற்றிலும் ஒரு சிறு பிசுறு இல்லாமல் கதையில் நன்றாக ஒன்றி வாசிக்க முடிகிறது...
தறியோட்டும் நெவுத் தொழிலாளர்கள் தினமும் சந்திக்கும் இன்னல்கள், அவமானங்களையும் அவற்றை எல்லாம் எதிர்த்து போராடும் நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தைப் பற்றியும் அழகாக கொடுத்திருக்கிறார்...ரங்கன் எவ்வாறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் முழுநேர சேவகனாக வருகிறான்...இயக்கத்தில் இருக்கும் தலைமறைவுத் தோழர்கள் படும் இன்னல்கள்...அரசும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கச் செய்யும் சதித்திட்டங்கள் என நாவல் தொய்வில்லாமல் எழுதியிருக்கிறார்...
மக்களுக்காக போராடும் போராளிகளை அரசும், அதன் இயந்திரமும் தீவிரவாத முத்திரை குத்தி அழிக்க நினைக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டியுள்ளது தறியுடன்!
புத்தகம் : தறியுடன்
ஆசிரியர் : இரா.பாரதிநாதன்
பதிப்பகம் : பொன்னுலகம் புத்தக நிலையம்
பக்கங்கள் : 780
விலை : 650/-


No comments:
Post a Comment