Saturday, February 15, 2020

நூல் அறிமுகம் - ஆப்பிளுக்கு முன் - சி.சரவண கார்த்திகேயன்

#வாசிப்பு2020

2/2020

காந்தி இந்த பெயரைக் கேட்டவுடன் நம் மனதிற்குத் தோன்றும் மகாத்மா தோற்றத்தையும் தாண்டி நம்மில் நிறைய பேருக்கு அவருடைய பிரம்மச்சரிய சோதனைகளைப் பற்றிய விமர்சனங்களையும், கண்ணோட்டங்களையும் காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கியிருக்கும் நூல் தான் ஆப்பிளுக்கு முன்.



காந்தியின் இறுதிவரை கூட இருந்த அவரது பேத்தி முறையான மநுபென் காந்தியின் மூலம் காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களை கதையாக சொல்லியிருக்கிறார். அஹிம்சை, எளிய வாழ்க்கை, உண்மையின் பக்கம் நின்று போராடிய காந்தியின் இன்னொரு பிடிவாதமான பக்கத்தை இந்த நாவல் கூறுகிறது. காந்தியின் வாழ்வைப் பற்றிய தெளிவான வாதங்களையும், நோக்கங்களையும், தீர்க்க தரிசனங்களையும் காந்தியின் மூலமாகவே எடுத்துரைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சரவணகார்த்திகேயன்.

ஆப்பிளுக்கு முன் - சி.சரவணகார்த்திகேயன்

உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 166
விலை : ₹170

No comments:

Post a Comment