Saturday, February 15, 2020

நூல் அறிமுகம் - சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

#வாசிப்பு2020

4/2020

அலைக்கழிப்பின் வழி அல்லல்படுகின்ற ஒருவனின் வாழ்விற்கும், சாவிற்கும் இடையிலான போராட்டத்தின் மங்கலான ஒரு சித்திரம் தான் சுபிட்ச முருகன் புதினம்...சாபத்தின் அடர்த்தியை அதன் வீரியத்தை அதுவிடுக்கும் செயதியை கதை நெடுகிலும் காமத்தின் ஊடாக சொல்லுகிறார்...

இளங்கா அத்தையின் மஞ்சள் பூசிய முகமும், அவளின் கோபமும், அதனால் ஏற்பட்ட சாபமும் நாயகனின் குடும்பத்தில் பல துர்மரணங்களை ஏற்ப்படுத்தி இறுதியில் அந்த சாபம் இறுதியாக நாயகனை காமத்தின் வழி எவ்வாறெல்லாம் அலைக்கழித்து இறுதில் சுபிட்ச முருகனின் காலடியில் பாவம் தீர்க்கிறான் என்பதை உயிரோட்டமாக எழுதியிருக்கிறார்...



கதையில் நிறைய இடங்களில் போதாமையை உணர முடிகிறது...இன்னும் கொஞ்சம் இந்த சம்பவத்தைப் பற்றி விவரித்து எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது! உதாரணமாக நாயகன் எச்சில் துப்பும் சாமியின் கோயிலுக்கு போகும் வரை நன்றாக இருந்தவனாக காட்டிவிட்டு, அடுத்த காட்சியில் அவனை முடவனாக காட்டியிருக்கிறார்...இடை இடையில் தொடர்பு துண்டித்து துண்டித்து இணைந்து கொண்டு வாசித்த ஒரு அனுபவத்தைக் கொடுத்தது சுபிட்ச முருகன்!

சரவணன் சந்திரன் அண்ணன் இதுவரை எழுதிய நூல்களில் இருந்து சற்றே விலகி இறையியலையும், மெய்ஞ்ஞானத்தையும் சேர்த்து வித்தியாசமான ஒரு நாவலை கொடுத்திருக்கிறார்! :)

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

பதிப்பகம் - டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் - 128
விலை - ₹150

No comments:

Post a Comment