#வாசிப்பு2020
8/2020
மிஷன் தெரு - தஞ்சை ப்ரகாஷ்
சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் மன்னார்குடி மற்றும் தஞ்சை மாநகரில் வாழந்த கிருஸ்துவ கள்ளர் குடும்பத்துப் பெண்ணான எஸ்தரின் வாழ்கையின் ஊடாக அந்த காலத்தில் நிலவிய சாதிய முறையை பற்றியும், மக்களின் வாழ்வியல் முறையும், கிறிஸ்துவ மதம் மாறிய மக்களின் வாழ் நிலையையும்...முக்கியமாக பெண்களின் நிலையையும் ஒரு குறுக்கு வெட்டுத் தொற்றமாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்...
நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனும் மன்னார்குடியில் 15 வயது நிரம்பிய தைரியமான, ஆங்கிலப் புலமை, இசை ஞானம், சமத்துவ சமுதாயத்தில் நம்பிக்கையுள்ள பெண்ணாக வலம் வருகிறாள் எஸ்தர்...அந்த காலகட்டத்தில் 15 வயதில் ஒன்று வீட்டில் விதவையாக இருப்பார்கள் அல்லது கணவன் வீட்டில் இருப்பார்கள்... ஆனால் எஸ்தர் மட்டும் அதில் விதிவிலக்காக இருந்தாள்...
வாழ்வில் எஸ்தர் எடுத்த ஒரு தவறான முடிவினால் இடையில் லாசரஸ் என்னும் ஒருவனின் வலையில் மாட்டிக் கொண்டு திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக நுழைத்தனுப்பப்படுகிறாள்...
அதன் பிறகு அவளின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ப்ரகாஷ் தன் இயல்பான எழுத்து நடையில் தொய்வின்றி எழுதியிருக்கிறார்!
18ம் நூற்றாண்டின் அரசியல், சமூக நிலைப்பாடுகள், தஞ்சை மாகாணத்தில் சரபோஜி மன்னர்களின் இக்கட்டான சூழல் என அன்றைய காலகட்டத்தையும் கதைக்கு இயைந்தாற்போல பயன்படுத்தியிருக்கிறார்!
பதிப்பகம் - வாசகசாலை பதிப்பகம்
பக்கங்கள் - 110
விலை - ₹120
No comments:
Post a Comment