#வாசிப்பு2020
13/2020
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள பனைவிளை கிராமத்தில் இருக்கின்ற புத்தம் வீடு தான் கதைக்களம்...அந்த ஊருக்கு பிரதான தொழில் பனை, பனையை வைத்து கள், பதனீர், கருப்பட்டி என விதவிதமான பண்டங்கள் செய்து விற்பது அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வியல்...
கிராமத்தில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சாரார் பனை முதலாளிகள், இன்னொரு சாரார் பனையேறி தொழில் பார்க்கும் கூலியாட்கள்...ஊரின் மிகவும் பெருமை வாய்ந்த வீடான புத்தம் வீட்டின் தலைவராக கண்ணப்பச்சி இருக்கிறார் அவருக்கு இரண்டு மகன்கள் அவர்களில் மூத்த மகனின் மகள் லிஸி தான் கதையின் நாயகி...இளைய மகனின் மகள் லில்லி குறும்பும், அழகும் நிறைந்த பெண்...
கதை இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடந்தது...அதனால் அந்த காலத்ததின் நிலையை இயல்பாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்! புத்தம் வீடும் அதன் மனிதர்களும் எவ்வாறு சரிவை சந்திக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை இறங்குமுகமாக எப்படி போகிறது என்பதையும் காலத்தின் கட்டாயம் இந்த இரண்டு பெண்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் ஹெப்சிபா அழகாக கதை சொல்லியிருக்கிறார்...
குமரி வட்டார வழக்கும், கடினமில்லாத மொழியும் இயல்பாக கதையில் ஒன்றி வாசிக்க முடிகிறது!
பதிப்பகம் - காலச்சுவடு
பக்கங்கள் - 160
விலை - 190
No comments:
Post a Comment