#வாசிப்பு2020
14/2020
தோழர் சோழன் - எஸ்.எஸ்.சிவசங்கர்
1987ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டிமடம், அரியலூர், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த நக்சல் போராட்டக் குழுவின் நடவடிக்கைகளை வைத்து எழுதப்பட்ட புத்தகம் தோழர் சோழன்...உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அந்தந்த சம்பவங்களின் பத்திரிகை குறிப்புகளோடு கொடுத்திருக்கிறார்...
தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக அரசின் கவனத்தை பெறுவதற்கு தோழர் தமிழரசன் தலைமையிலான நக்சல் குழு மருதையாற்று பாலத்தை தகர்ப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது...
பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட சோழன்...ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து தன்னை இணைத்துக் கொள்கிறான்...சமூகத்தில் நடக்கும் கொடுமைகள், காவல்துறையில் நடக்கும் அநியாயங்களையும் பார்க்கும் சோழன் கொத்தித்துப் போய் களம் இறங்குகிறான்!
சிவசங்கர் கட்சி அரசியலில் இருந்தாலும் இயக்க அரசியலில் இருந்த ஒரு அமைப்பைப் பற்றி எழுதியிருப்பது, அரசியல் சார்ந்த இயக்கம் ஆட்சியில் எவ்வளவு தாக்கத்தையும், பிராந்திய ரீதியிலான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்...
நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்திருந்தாலும் வரலாறு கூறுவது போல வறட்சியாக இல்லாமல், கதை சொல்லலை இலகுவாக செய்திருக்கிறார் ஆசிரியர்!
பதிப்பகம் - கின்டில் பதிப்பு
பக்கங்கள் - 123
No comments:
Post a Comment