Wednesday, December 2, 2020

நூல் அறிமுகம் - நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

#வாசிப்பு2020

16/2020

நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

இலங்கையில் 80 களில் நடந்த போரில் பங்கேற்ப்பதற்காக பயிற்சி பெற்ற இளம் பதின் வயது போராளிகளின் வாழ்வியலை விளக்குகிறது நஞ்சுண்டகாடு...அவர்களின் நஞ்சுண்டகாடு பயிற்சி முகாமில் நடக்கும் விசயங்களையும், இனியவன் மற்றும் சுகுமாறன் என்கிற இரண்டு போராளிகளுக்கு இடையில் ஏற்ப்படும் நட்பை முன்வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் குணா கவியழகன்...


பயிற்சி முகாமில் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் பனிஷ்மெண்ட்டுகள் என கதை போனாலும்...அங்கிருக்கும் போராளிகளின் இடையே இருந்த ஒற்றுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறு சிறு பகடியான தருணங்களும் இல்லாமல் இல்லை...

அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து போர்களத்திற்கு போகும் போது வாசிக்கும் நமக்கும் அந்த பிரிவுணர்வு ஏற்ப்படுகிறது...அதன் பிறகாக நடக்கும் இனியவன், சுகுமாறன் சந்திப்புகளும்...சுகுமாறனின் குடும்ப நிலைமை போரின் குரூரத்தால் தாக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையை அடைந்து துன்புருவதை சுகுமாறனின் அக்கா சொல்லும் போது  மனித வாழ்வின் துன்பியல் சக்கரம் இப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை அடிக்குமா என்கிற வேதனை எழுந்து ஒரு துளி கண்ணீர் துளிர்க்கிறது...அந்த இடத்தில் குணா அவரின் உணர்வுகளை வாசிப்பவரிடம் கடத்தி விடுகிறார்...

தமிழீழ போரில் பங்கேற்ற போராளிகளின் வாழ்வியலை அறிய விரும்புகிறவர்கள் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்...

பதிப்பகம் - கிண்டில் பதிப்பு
விலை - 99

No comments:

Post a Comment